1/02/2013

அம்மா வாசம்


ஊரிலிருந்து வந்திருக்கும் ரமேசிடம்
அக்கறையோடும்
அன்போடும்
வாஞ்சையோடும்
வெள்ளந்தியாய்
கொடுத்தனுப்பியிருக்கிறாள்
பேரக்குழந்தையை மனதில் வைத்து
கட்டத் தேவையில்லாத் தொட்டிலுக்காய்
தனது நூல் சேலையில் ஒன்றை!
அம்மாவின் வாசத்தில்
மெல்லிய இறகாகி
வானில் தவழும்
சுகமோ சுகம்
விரித்துப் போட்டு
அதன் மேல் படுத்துறங்கும்
குழந்தையாகிப் போன எனக்கு!!

நன்றி: தென்றல் மாத இதழ்

3 comments:

அருணா செல்வம் said...

அடடா...
அருமையான கவிதை.
தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

கீதமஞ்சரி said...

வணக்கம். தங்கள் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
வாசிக்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_18.html
நன்றி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-